என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் ஏப்ரல் 15-ந்தேதி தொடக்கம் - ஆசிரியர் மலர்

Latest

30/03/2021

என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் ஏப்ரல் 15-ந்தேதி தொடக்கம்


கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் என்ஜினீயரிங் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

சென்னை:

தமிழகத்தின் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதி ஆண்டு படித்த மாணவர்களுக்கு மட்டும் இறுதி செமஸ்டர் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.

இந்தநிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் என்ஜினீயரிங் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் இறுதி ஆண்டு மற்றும் எம்.இ., எம்.டெக். மாணவர்கள் தவிர மற்ற மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்தநிலையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி அளித்துள்ளது. தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் சமீபத்தில் வெளியிட்டது. அதன் படி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் ஏப்ரல் 15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும்.

செய்முறை தேர்வுகளை மார்ச் 31-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். ஒரு வேளை நிர்ணயிக்கப்பட்ட காலகெடுவுக்குள் செய்முறை தேர்வுகளை நடத்த இயலாவிட்டால் பல்கலைக் கழகத்திடம் முன் அனுமதி பெற்று பின்னர் நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459