சட்டமன்ற தேர்தலில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் COVID_19 தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் -படிவம் பூர்த்தி செய்யக் கோருதல் சார்ந்து நாகை முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் - ஆசிரியர் மலர்

Latest

28/02/2021

சட்டமன்ற தேர்தலில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் COVID_19 தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் -படிவம் பூர்த்தி செய்யக் கோருதல் சார்ந்து நாகை முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்

 


WhatsApp%252BImage%252B2021-02-27%252Bat%252B8.53.07%252BPM

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் / வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் , அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை | பட்டதாரி | தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகப் பணியாளர்கள் , ஆசிரியர் பயிற்றுர்கள் அனைவருக்கும் 02.03.2021 செவ்வாய் கிழமை மற்றும் 03.03.2021 புதன் கிழமை ஆகிய நாட்களில் கோவிட் -19 தடுப்பூசி போடப்பட உள்ளது. மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை / சிறப்பாசிரியர்கள் / பட்டதாரி / தொழிற்கல்வி / கணினி / முதுகலை ஆசிரியர்கள் , தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் 04.03.2021 வியாழன் மற்றும் 05.03.2021 வெள்ளிக் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் கோவிட் -19 தடுப்பூசி போடப்பட உள்ளது. 


மேலும் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்துவகை பணியாளர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசி போடப்பட உள்ளது . மேற்காண் தேதிகளில் விடுபட்டவர்களுக்கு 06.03.2021 சனிக்கிழமை அன்று தடுப்பூசி போடப்பட உள்ளது . எனவே ஒன்றியம் வாரியாக கோவிட் -19 தடுப்பூசி போடுவதற்கு தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டி நெறிமுறைகளின்படி பள்ளிகளை தெரிவு செய்து கீழ்க்குறிப்பிட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து மறு மின்னஞ்சலில் ( முதன்மைக்கல்வி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ) அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் , அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459