அனைத்து பள்ளிகளும், பள்ளி வளாகத்தை தூய்மை செய்து, பயனீட்டுச் சான்று சமர்ப்பித்தல் சார்ந்து SPD உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

14/01/2021

அனைத்து பள்ளிகளும், பள்ளி வளாகத்தை தூய்மை செய்து, பயனீட்டுச் சான்று சமர்ப்பித்தல் சார்ந்து SPD உத்தரவு

 


. IMG_20210113_171857




ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக , 2020 -21 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பாதுகாப்பு உணர்வுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதற்காக , “ பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ” ( Safety & Security at School level ) என்ற தலைப்பில் , பார்வை 1 - இன்படி பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்காக , பள்ளி ஒன்றுக்கு ரூ .500 / - வீதம் 6,173 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கும் , 31,297 அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கும் நிதி விடுவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளது. 


மேலும் புதிய கல்வி வேலை வாய்ப்பு தகவலை பெற இங்கே கிளிக் செய்யவும்



இந்நிலையில் , 19.01.2021 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாலும் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதாலும் பார்வை 1 இல் உள்ள வழிகாட்டுதல்களின்படி , விடுவிக்கப்பட்ட நிதியை உடனடியாக பயன்படுத்தி பணியினை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தவும் அதற்கான பயன்பாட்டுச் சான்றிதழை பள்ளிகளிடமிருந்து பெற்று 20.01.2021 ஆம் தேதிக்குள் மாநில திட்ட இயக்ககத்தின் rmsatamilns@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459