ஜாக்டோ ஜியோ தலைவர்கள் எதிர்கட்சித் தலைவருடன் சந்திப்பு - ஆசிரியர் மலர்

Latest

28/12/2020

ஜாக்டோ ஜியோ தலைவர்கள் எதிர்கட்சித் தலைவருடன் சந்திப்பு

 


சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மனு அளித்தனர். ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களின் “ஜாக்டோ-ஜியோ” கூட்டமைப்பு “ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்துச் செய்ய வேண்டும் - பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் - நிலுவையிலுள்ள கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றிட, தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து கட்சி தலைவர்களும் சந்திக்க திட்டமிட்டு

அதன்படி, முதலாவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை,
இன்று (28.12.2020), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், “ஜாக்டோ-ஜியோ” கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.




மேலும் புதிய செய்திகளை பெற இங்கே கிளிக் செய்யவும்


Join Telegram : https://bit.ly/3n9Wkek

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459