கடலூர் ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 - ஆசிரியர் மலர்

Latest

02/12/2020

கடலூர் ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

 


கடலூர் ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 20 சாலை ஆய்வாளர் பணிகளுக்கான பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 25.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி பணியிடங்கள் :

மொத்த பணியிடங்கள் : 20

பணியின் பெயர் : சாலை ஆய்வாளர்

வயது வரம்பு :

01.07.2020 கணக்கீட்டின்படி 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

ITI / Civil தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 19500 /- முதல் ரூ. 62000 /- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளருக்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர், மாவட்ட ஆட்சியரகம் முதல் தளம் , கடலூர் என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ 25.02.2020 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். 
Download கடலூர் ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 Pdf

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459