1.74 லட்சம் இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்கல் - பஞ்சாப் முதல்வர் - ஆசிரியர் மலர்

Latest

31/12/2020

1.74 லட்சம் இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்கல் - பஞ்சாப் முதல்வர்

 


பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

பஞ்சாப் மாநில பள்ளி மாணவர்களுக்கு 2020-ல் 1.74 லட்சம் இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் 2017 சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்டது. 

இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் ‘பஞ்சாப் ஸ்மார்ட் இணைப்பு திட்டத்தின்’ கீழ் 12வது படிக்கும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,

பஞ்சாபில் 12ஆம் வகுப்பு படிக்கும் 1,74,015 மாணவர்களுக்கு 2020ஆம் ஆண்டு இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், முதல்வர் அமரீந்தர் சிங்கின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது எனக் தெரிவித்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459