பள்ளிக்கல்வித்துறையில் இரண்டு இயக்குனர்கள் மாற்றம். - ஆசிரியர் மலர்

Latest

21/10/2020

பள்ளிக்கல்வித்துறையில் இரண்டு இயக்குனர்கள் மாற்றம்.

 



1 அரசாணை ( நிலை ) எண் .172 , பள்ளிக் கல்வி [ பக 1 ( 1 ) ] த் துறை , நாள் . 20.09.2019 . . 2. பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண் .19283 / « 1 / இ 1 / 2020 , நாள் . 07.09.2020 மற்றும் 30.09.2020 . ஆணை : மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்துடன் பெறப்பட்ட பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவின் அடிப்படையில் , பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி விதிகளில் வகுப்பு II- இன் கீழுள்ள இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்ககத்தில் காலியாக உள்ள இணை இயக்குநர் ( பாடத்திட்டம் ) பணியிடத்தினை நிரப்பும் பொருட்டு , பள்ளிக் கல்வித் துறையில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுள் பணி முதுநிலைப்படி முந்துரிமையிலுள்ள திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணிபுரியும் திருமதி . எஸ் . சாந்தி என்பாருக்கு அரசுப் பணியாளர்கள் ( பணி நிபந்தனைகள் ) சட்டம் 2016 , பிரிவு 47 ( 1 ) -இன்கீழ் இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடத்திற்கு தற்காலிக பதவி உயர்வு வழங்கி , மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்ககத்தில் காலியாக உள்ள இணை இயக்குநர் ( பாடத்திட்டம் ) பணியிடத்தில் பணியமர்த்தி அரசு ஆணையிடுகிறது . இந்த தற்காலிகப் பதவி உயர்வு பின்வரும் காலத்தில் அன்னாருக்கு முன்னுரிமை கோரும் உரிமையை அளிக்காது என்ற நிபந்தனைக்குட்பட்டது

1 comment:

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459