தமிழக அரசு வேலை வாய்ப்பு அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

29/10/2020

தமிழக அரசு வேலை வாய்ப்பு அறிவிப்பு.

 


ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கள்ளக்குறிச்சி மாவட்டம். 

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் , காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்பிட சம்பந்தப்பட்ட தனி அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி ) -ஆல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . ஊராட்சி செயலர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் , ஊராட்சி செயலர் காலிப்பணியிட விபரம் , இன சுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவை இம்மாவட்டத்தின் www.kallakurichi.nic.in இணைய தளத்தில் இடம்பெற்றுள்ளது . இப்பணியிடத்திற்கான விண்ணப்பங்களை 29.10.2020 தேதி முதல் , மேற்படி இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . மேலும் விண்ணப்பங்களை நேரடியாக தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் பதிவு அஞ்சல் மூலமாகவும் நேரடியாகவும் 29.10.2020 முதல் 09.11.2020 தேதி வரை அலுவலக வேலை நேரத்தில் தொடர்புடைய தனி அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி ) அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளப்படும் . தனி அலுவலர்கள் / வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ( கிராம ஊராட்சி ) கள்ளக்குறிச்சி 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459