பள்ளி கல்லூரிகளை திறப்பது குறித்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் - ஆசிரியர் மலர்

Latest

25/08/2020

பள்ளி கல்லூரிகளை திறப்பது குறித்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்


சென்னை, 
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்துமே மூடப்பட்டன.. கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே தற்போது நாடு முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு அமலுக்கு வர உள்ளன. இதனைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான தடை தொடர்ந்து வருவது குறித்து கேள்வி எழுந்தது.
இந்நிலையில் “தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459