அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பாக உள்ளது - அமைச்சர் பெருமிதம் - ஆசிரியர் மலர்

Latest

30/08/2020

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பாக உள்ளது - அமைச்சர் பெருமிதம்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பாக உள்ளது. இதுவரை பிளஸ் 1 வகுப்பில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் மாணவ , மாணவிகள் கூடுதலாக சேர்க்கப்பட் டுள்ளனர். மாணவர் சேர்க்கை தீவிரமாக உள்ளதால் , ஆசிரியர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்க வேண்டியது கட்டாயம். செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நீடிக்கும் என்ற நிலையில் , எந்தளவுக்கு மாணவர்கள் சேர்ந்தாலும் , அவர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். நீட் தேர்வு நடக்கும் நாளில் , தேர்வு மையங்களுக்கான போக்குவரத்து வசதிகள் செய்வது குறித்து முதல்வர் பழனிசாமி முறைப்படி அறிவிப்பார்.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459