தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,063 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று - ஆசிரியர் மலர்

Latest

04/08/2020

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,063 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று



கோப்புப்படம்

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,063 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,063 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தோர் 5,035 பேர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 28 பேர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்த பாதிப்பு 2,68,285 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,023 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய செய்திக் குறிப்பில் மேலும் 108 பேர் (அரசு மருத்துவமனை -83; தனியார் மருத்துவமனை – 25) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 4,349 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று மட்டும் 6,501 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,08,784 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் விகிதம் 77.80% ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தேதியில் தமிழகத்தில் 55,152 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 55,122 மாதிரிகள் உள்பட இதுவரை 28,92,395 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மேலும், 60 அரசு ஆய்வகங்கள், 65 தனியார் ஆய்வகங்கள் என மொத்தமாக 125 பரிசோதனை ஆய்வகங்கள் தமிழகத்தில் உள்ளன. 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459