தனியார் பள்ளிகளிலும் கல்வித்தரம் குறைந்தது - ஆய்வில் தகவல் - ஆசிரியர் மலர்

Latest

25/07/2020

தனியார் பள்ளிகளிலும் கல்வித்தரம் குறைந்தது - ஆய்வில் தகவல்


அரசுப்பள்ளிகளைக்காட்டிலும் கல்வித்தரத்தில் தனியார் பள்ளிகள் சிறந்தது என்பதால் , பெற்றோர் தங்கள் குழந்தைகளைதனியார்பள் ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி சேர்க்கிறார்கள். ஆனால் , தனியார்பள்ளிகளி கல்வித்தரம் குறைந்துவிட்டது.

5 - ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2 - ம் வகுப்பில் போடும் வகுத்தல்கணக்குக் கூட தெரியவில்லை என்ற வேதனையானசெய்தியைத் தான் கேட்க முடிகிறது. இந்தியாவில் 12 கோடிக் கும்மேற்பட்டமாணவர்கள் தனியார் பள்ளிகளில்தான் பயில்கிறார்கள் . பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் எண் ணிக்கையில் 50 சதவீதத்திற் கும்மேற்பட்டமாணவர்கள் தனியார் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள் . ஆங்கிலவ ழிக்கல்வியில் தங்கள் குழந் தைகளைபடிக்கவைத்தால் , கல்வித்திறன் அதிகரிப்ப தோடு வேலை வாய்ப்பும் எளிதில் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் பெற் றோர்கள் தங்கள் குழந்தை களை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். ஆனால் சமீபத்தில் வெளியான அறிக் கைகளில் தனியார் பள்ளி கள் , பெற்றோர் எதிர்பார்க்கும் அளவுக்கு கல்வித்தரம் வாய்ந்தவை யாக இல்லை என்பது தெரியவந்துள்ளது.
கிராமப்புற பள்ளிகள் கிராமப்புறங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் 60 சத வீதம் பள்ளிகளில் 5 -ம் வகுப்பு மாணவர்கள் சாதா ரண வகுத்தல் கணக்கைக் கூடபோடமுடியாமல் திணறுகிறார்கள். 35 சதவீத கிராமப்புறதனியார்பள்ளிக ளில் பயிலும் 5 - ம் வகுப்பு மாணவர்கள் , 2 - ம் வகுப்பு கணக்குப் பாடத்தைக்கூட சரியாக புரிந்து கொள்ளமுடியாதவர்களாக இருக்கிறார்கள். இந்தநிலை கிராமப்பு றங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் மட்டும்தான் என்பதில்லை. தனியார் பள் ளிகளில் பயிலும் பணக்கார வீட்டுப்பிள்ளைகள் 20 சதவீ தம் பேர் இப்படித்தான் இருக்கிறார்கள் . 8 முதல் 11 வயது வரைஉள்ள மாணவர் களில் 56 சதவீதம் பேர் 2 - ம் வகுப்பில் சொல்லிக்கொடுக் கப்படும் அடிப்படைபாடத் தைக்கூட புரிந்து கொள்ள முடியாதவர்களாக உள்ளனர். 10 - ம் வகுப்பு மாணவர்கள் பழைய மாணவர்கள் இதே நிலையில்தான் இருக் கிறார்கள் . தனியார் பள்ளிக ளில் 10 - ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் நான்கைந்து பாடங்களில் 50 சதவீதத்திற் கும் குறைவாகத்தான் மதிப் பெண் பெறுகிறார்கள் . தனியார் பள்ளிகளில் 60 சதவீதப் பள்ளிகள் 10 - ம் வகுப்புத் தேர்வுகளைக்கூட முறைப் படி நடத்துவது இல்லை . இதனால் , இந்தப் பள்ளிக ளில்படிக்கும்தங்களது குழந் தைகளின் கல்வி அறிவு எப் படி இருக்கும் என்பதை தீர் மானி க் க முடியாதவர்களாக பெற் றோர்கள் உள்ளனர்.

இதற்கு காரணம் போதுமான கல்வி உபகரணங்கள் இல்லாமை , பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாதது ஆகியவைதான் என்று தேசிய மதிப்பீட்டு கணக்கெடுப்பு அமைப்பு கூறுகிறது. நன்கு பயிற்சிபெற்ற ஆசி ரியர்களால் மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். பெற்றோர்களால் மாணவர்கள் நன்கு கவனிக்கப்படவேண்டும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459