தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - ஆசிரியர் மலர்

Latest

 




 


22/07/2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை,
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 1,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,939 ஆக அதிகரித்துள்ளது. இன்று தொற்று உறுதியானவர்களில் 49 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும், 25 பேர் வெளிநாடுகளில் இருந்தும் வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்துள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு மாவட்டத்திலின்று 223 பேருக்கும், திருவள்ளூரில் 430  பேருக்கும், காஞ்சிபுரத்தில் 325 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர பிற மாவட்டங்களில் அதிகபட்சமாக மதுரையில் 197 பேர், கோவையில் 178 பேர், திருவண்ணாமலையில் 210, கன்னியாகுமரியில் 152 பேர், தூத்துக்குடியில் 327 பேர், திருநெல்வேலியில் 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 74 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 21 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும் 53 பேர் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,144 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 4,910 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,31,583 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 51,765 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 60,112 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 20,95,757 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459