தமிழகத்தில் கடந்த 2ம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக தினமும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு உறுதியாகிவந்த நிலையில், இன்று 4 ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்புகளே உறுதியானது…
இன்று ஒரேநாளில் 3,827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,14,978 அதிகரித்துள்ளது…
தமிழகத்தில் இன்று மட்டும் 3,793 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 66,571 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று மட்டும் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்தம் 1,571 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment