தமிழகத்தில் முழு ஊரடங்குக்கான கட்டுப்பாடுகள் - ஆசிரியர் மலர்

Latest

29/06/2020

தமிழகத்தில் முழு ஊரடங்குக்கான கட்டுப்பாடுகள்



தமிழகத்தில் முழு ஊரடங்கு காலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது தமிழகத்தில் முழு ஊரடங்கு காலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
முழு ஊரடங்கு: 

5.7.2020, 12.7.2020, 19.7.2020 மற்றும் 26.7.2020 ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும்
.

திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கான கட்டுப்பாடுகள்: 

  • திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
  • இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.  

பொது பேருந்து போக்குவரத்து : 
மாநிலத்தில் மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள
தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து 1.7.2020 முதல் 15.7.2020
வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

 இ-பாஸ் முறை : 

  • அந்தந்த மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும்.
    வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும்,  இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
  • முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் இடங்களில் 30.6.2020 வரை வழங்கப்பட்ட இ-பாஸ் 5.7.2020 வரை செல்லும்.  இதற்கு மீண்டும் புதிய இ-பாஸ் பெறத் தேவை இல்லை. 
  • ஒரு மாவட்டத்திலிருந்து வேறொரு மாவட்டத்திற்கு அரசுப் பணிகளுக்கான ஒப்பந்தங்களில் பங்கேற்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும், அப்பணியை மேற்பார்வை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கும் மற்றும் இப்பணிகள் சம்பந்தமாக அரசு அதிகாரிகளை சந்திக்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களால் இ-பாஸ் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459