தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - ஆசிரியர் மலர்

Latest

 




 


04/06/2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


ஆனால் மே 31-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
அன்று 1149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜூன் 1-ந்தேதி 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜூன் 2-ந்தேதி தொடர்ந்து 3-வது நாளாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. நேற்று 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று 1384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐந்தாவது நாளாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 27,256 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 585 பேர் குணமடைந்துள்ளனர். 12 பேர் பலியாகியுள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459