வீட்டு வேலைப் பணியாளர்கள் பணிபுரிவதற்கான அனுமதி ரத்து - ஆசிரியர் மலர்

Latest

05/05/2020

வீட்டு வேலைப் பணியாளர்கள் பணிபுரிவதற்கான அனுமதி ரத்து






வீட்டு வேலைப் பணியாளர்கள் பணிபுரிவதற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, இன்று (மே 5) வெளியிட்ட அறிவிப்பில், “மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் உத்தரவினை மே 4-ம் தேதி முதல் மே 17-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சில தளர்வுகளுடன் நீட்டிப்புச் செய்ததன் அடிப்படையில் மே 3-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது அந்த அரசாணையில்
வீட்டு வேலைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும்
சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்றுப் பணிபுரிய அனுமதிக்கப்பட்டது.
தற்போது, பொதுநலன் கருதி மே 3-ம் தேதி அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் வீட்டு வேலைப் பணியாளர்களுக்கு பணிபுரிய வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது. ஆகவே, வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் வரும் மே 17-ம் தேதி நள்ளிரவு முடியும் வரை தாங்கள் பணிபுரியும் வீடுகளுக்குச் செல்லாமல் அவரவர் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459