தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று - ஆசிரியர் மலர்

Latest

13/05/2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று


இந்தியாவையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது.
வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 8 ஆயிரத்து 718 பேருக்கு வைரஸ் பரவி இருந்தது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 134 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தனர். கொரோனா பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆக இருந்தது
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 
அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 509 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின்
மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 227 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 6 ஆயிரத்து 984 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 176 ஆக உயர்ந்துள்ளது. 
ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459