வருமான வரி தாக்கல் செய்ய நவ.,30 வரை அவகாசம் - ஆசிரியர் மலர்

Latest

13/05/2020

வருமான வரி தாக்கல் செய்ய நவ.,30 வரை அவகாசம்


புதுடில்லி: வருமான வரி தாக்கல் செய்ய நவ.,30 வரை அவகாசம் அளிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: டிடிஎஸ் பிடித்தம் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது. இதனால்,மக்களிடம் 50 ஆயிரம் கோடி ரூபாய் பணம் புரளும். இது நாளை முதல் அமலுக்கு வருகிறது. வியாபாரம் வேறு காரணத்தினாலோ ரூ.15 ஆயிரத்திற்கு மேல் செலுத்தப்படும் தொகைக்கு வரிபிடித்தம் செய்யப்படும்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நவ., 30 வரை நீட்டிக்கப்படுகிறது. ஜூலை31, அக்.,31 வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கான அவகாசமும் நவ.,31 வரை நீட்டிக்கப்படுகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் பிரச்னைகளை பேச்சு மூலம் தீர்க்கும் விவாத்சே விஸ்வாஸ் திட்டத்திற்கான அவகாசம் டிச.,31 வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459