10 ம் வகுப்பு பொது தேர்வு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

28/05/2020

10 ம் வகுப்பு பொது தேர்வு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு


வரும் 15ம் தேதி துவங்க உள்ள 10 ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டு உள்ளது

.இதனையடுத்து பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் தேர்வு விடைத்தாள் திருத்தம் செய்யும் பணிகள் தொடர்பாக தலைமை செயலாளர் சண்முகம் அரசாணை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்த தேவையில்லை
வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுதலாம்
வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களை தனி அறையில் அமர வைக்க வேண்டும்.
மாணவர் விடுதிகளை வரும் 11 ம் தேதி முதல் தேர்வுநாள் முடியும் வரை திறந்து வைக்க வேண்டும்.
மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மறு சுழற்சி செய்யக்கூடிய முக கவசம் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459