வேகம் காட்டும் கொரோனா : பரிசோதனைக்கருவிகள் எப்பொழுது வரும் ? - ஆசிரியர் மலர்

Latest

13/04/2020

வேகம் காட்டும் கொரோனா : பரிசோதனைக்கருவிகள் எப்பொழுது வரும் ?


டெல்லி: உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,152 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 308 பேர்  உயிரிழந்த நிலையில், 857 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாளை வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால்,  மேலும், ஊரடங்கு நீட்டிக்க பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
பஞ்சாப், ஒடிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தனிச்சையாக ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டித்துள்ளனர். இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளனர். அவர்கள் கூறியதாவது; ஊரடங்கு நடவடிக்கைளை செயல்படுத்த அனைத்து மாநிலங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
ஓய்வுபெற்ற பணியாளர்கள், NSS மற்றும் NCC கேடட்கள் மற்றும் பிற துறைகளின் அதிகாரிகளும் ஊரடங்கு நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் போலீசாருக்கு உதவுகிறார்கள். நேற்று வரை 2,06,212 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், கவலைப்படத் தேவையில்லை, 6 வாரங்களுக்கு எளிதாக சோதனைகளை நடத்த முடியும். இந்தியாவில் உள்ள ஒரு சில மாநில  மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுக்குள் கொண்டுள்ளது. இந்த பகுதிகளில் இருந்து 14 நாட்களில் புதிய பாதிப்புகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக வழக்குகள் பதிவாகிய 15 மாநிலங்களில் 25 மாவட்டங்கள் 14 நாட்களில் புதிய பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
சீனாவிலிருந்து கொரோனா சோதனை கிட்களின் முதல் சரக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி இந்தியாவுக்கு வரும். மற்ற 25 மாவட்டங்களில் தொடர் வளையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் 9,50,828 பேர் இருப்பதால் 1,62,664 வீடுகள் இங்கு அடையாளம் காணப்பட்டுள்ளன. 80 பாதிப்புகள் இங்கே காணப்படுகின்றன.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459