1.20 லட்சம் இடங்களுக்கு 4.07 லட்சம் பேர் விண்ணப்பம்! அரசுக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் -ராமதாஸ் - ஆசிரியர் மலர்

Latest

30/07/2022

1.20 லட்சம் இடங்களுக்கு 4.07 லட்சம் பேர் விண்ணப்பம்! அரசுக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் -ராமதாஸ்

  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1.20 லட்சம் இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், அவற்றுக்கு 4.07 பேர் விண்ணப்பித்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.ஏழை மாணவர்களின் உயர்கல்வியை கருத்தில் கொண்டு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது; அரசுக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1.20 லட்சம் இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், அவற்றுக்கு 4.07 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 2.98 லட்சம் விண்ணப்பங்கள் தகுதியானவை. கடந்த ஆண்டை விட கூடுதலாக 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர்.


என்ன காரணம்?


கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், பலருக்கு தனியார் கல்லூரிகளில் சேர வசதி இல்லை. அவர்கள் அரசு கல்லூரிகளில் சேர விரும்புவதும், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருப்பதும் தான் விண்ணப்பங்கள் அதிகரிக்கக் காரணம் ஆகும்.இடம் மறுக்கக்கூடாதுபொருளாதார வசதியற்றவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் மறுக்கப்பட்டால், அவர்களால் கண்டிப்பாக உயர்கல்வி கற்க முடியாது. இது உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது தீர்வல்ல.


மாணவர் சேர்க்கை


அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை குறைந்தது 50% அதிகரிக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் கட்டமைப்புகளையும், ஆசிரியர் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் அதிக எண்ணிக்கையில் ஏழை மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர்வது உறுதி செய்யப்பட வேண்டும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்1.20 லட்சம் இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், அவற்றுக்கு 4.07 பேர் விண்ணப்பித்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459