TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை விளக்கம்! - ஆசிரியர் மலர்

Latest

07/10/2021

TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை விளக்கம்!

 


.com/proxy/

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 மற்றும் VAO போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய சில விவரங்கள் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.


TNPSC தேர்வு


தமிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குரூப் 1 முதல் குரூப் 4 மற்றும் VAO வரையுள்ள அனைத்து பணியிடங்களுக்கும் TNPSC தேர்வுகள் கட்டாயமாகும். வழக்கமாக இந்த அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித்தேர்வுகள் குறித்த அட்டவணை முந்தய ஆண்டிலேயே வெளியிடப்படும். அந்த தேர்வு கால அட்டவணையின் படி ஒவ்வொரு ஆண்டும் போட்டித்தேர்வுகள் நடத்தப்படும்.


அந்த வகையில் இந்த ஆண்டுக்கான TNPSC தேர்வுகள் குறித்த அட்டவணை கடந்த 2020ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் துவங்கி கொரோனா 2ம் அலை தீவிரமடைந்து வந்ததால், திட்டமிடப்பட்ட போட்டித்தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் மாநிலம் முழுவதும் தற்போது பரவலாக நோய் தொற்று குறைந்திருக்கக்கூடிய சூழலில் இந்த போட்டித்தேர்வுகளை மீண்டும் நடத்துவதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) முடிவு செய்துள்ளது.


அந்த வகையில் இம்மாதம் குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது. இப்போது குரூப் 4 தேர்வுக்காக காத்திருக்கும் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விவரங்களை இப்பதிவில் காணலாம்.


தேர்வு: குரூப் 4


பதவிகள்:


இளநிலை உதவியாளர் (Junior Assistant)

தட்டச்சர் (Typist)

சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist)

கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer)

வரித் தண்டலர் (Bill Collector)

நில அளவர் (Field Surveyor)

வரைவாளர் (Draftsman)

கல்வித்தகுதி:

பொதுவாக குரூப் 4 தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி என்பது போதுமான கல்வித்தகுதியாகும்.

அதன் படி, கிராம நிர்வாக அலுவலர் இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி அவசியமாகும்.

அதே நேரத்தில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஏனென்றால் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுப் பணியின் போது கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படுவது உண்டு.

வயது வரம்பு:

இந்த தேர்வுக்கான வயது வரம்பு, 18 முதல் 30 வரை இருக்க வேண்டும்.

இப்போது கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு பொதுப்பிரிவில் 21- 30 மற்றும் பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உள்ளது.

இளநிலை உதவியாளர் உள்ளிட்ட மற்ற பணிகளில், பொதுப் பிரிவினருக்கு 18 – 30 வரை மற்றும் பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரையும் சலுகைகள் உண்டு.

ஆனால் 12ம் வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வயது வரம்பு தேவையில்லை.


தேர்வு முறை:


எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு.

இதில் எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண் கொண்ட 200 வினாக்கள் கேட்கப்படும்.

வினாத்தாள் அப்ஜக்டிவ் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

பாடத்திட்டம்:


மொழிப் பாடப்பிரிவில் தமிழ் அல்லது ஆங்கிலப் பாடங்களில் 100 வினாக்கள் கேட்கப்படும்.

இதில் ஏதேனும் ஒரு மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த பாடத்திட்ட முறையில் மாற்றங்கள் அறிவிக்கப்படலாம்.

பொது அறிவு பிரிவில் 100 வினாக்கள் கேட்கப்படும்.

இதில் 75 பொது அறிவு கேள்விகளும், 25 திறனறி கேள்விகளும் அடங்கும்.

பொது அறிவியல் பிரிவுக்கான கேள்விகள்:


அறிவியல் – இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்கள்.

நடப்பு நிகழ்வுகள் – வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், அறிவியல்.

புவியியல் – புவி, சூரியக் குடும்பம், பருவகாற்றுகள், வானிலை, நீர் ஆதாரங்கள், மண், கனிம வளங்கள், காடுகள், வன உயிரினங்கள்.

வரலாறு – சிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள், தில்லி சுல்தான், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜய நகர மற்றும் பாமினி அரசுகள் தென்னிந்திய வரலாறு – கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள்.

இந்திய அரசியல் – அரசியலமைப்பு, முகவுரை, அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள், குடியுரிமை, கடமைகள் மற்றும் உரிமைகள், மத்திய மற்றும் மாநில நிர்வாகம், பாராளுமன்றம், பஞ்சாயத்து அமைப்பு.

பொருளாதாரம் – ஐந்தாண்டு திட்டங்கள், நில சீர்திருத்தம், வேளான் மற்றும் வணிக வளர்ச்சி.

இந்திய தேசிய இயக்கம் – தேசிய எழுச்சி, விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு, தாகூர், ராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் பங்கு ஆகியவை கேட்கப்படும்.

நவம்பர் 1 முதல் தினசரி மதியம் பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில அரசின் வழிகாட்டுதல்கள்!


திறனறி வினாக்கள்:


தர்க்க அறிவு (Reasoning) மற்றும் கணிதம், சுருக்குதல் (Simplification), எண்ணியல் (Number System), கூட்டுத்தொடர் மற்றும் பெருக்குத்தொடர் (Arithmetic Progression and Geometric Progression), சராசரி (Average), சதவீதம் (Percentage), விகிதம் மற்றும் விகித சமம் (Ratio and Proportion), மீ.பெ.வ (Highest Common Factor), மீ.சி.ம (Least Common Multiple), தனிவட்டி (Simple Interest), கூட்டுவட்டி (Compound Interest), அளவியல் பாடங்களில் பரப்பளவு (Area) மற்றும் கன அளவு (Volume), வேலை மற்றும் நேரம் (Time and Work), வேலை மற்றும் தூரம் (Time and Distance), வயது கணக்குகள் (Ages), இலாபம் மற்றும் நஷ்டம் (Profit and Loss), வடிவியல் (Geometry), இயற்கணிதம் (Algebra) போன்ற தலைப்புகளிலிருந்து கேட்கப்படும்.


கட் ஆப் மதிப்பெண்கள்:


கேட்கப்படும் கேள்விகளில் 300 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும்.

இத்தேர்வில் மதிப்பெண்கள் மட்டுமே தகுதியானது அல்ல.

அதனால் தேர்வர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கட் ஆப் மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.

இந்த கட் ஆப் மதிப்பெண்களை உறுதியாக கூற முடியாது.

ஒருவேளை பொதுப்பிரிவினர் 164 மதிப்பெண்கள் வரை எடுத்தால் மட்டுமே பணிக்கு வாய்ப்பு இருக்கும்.

அதே போல BC பிரிவில் -162, MBC பிரிவில் -162, BCM பிரிவில் -154, SC பிரிவில் -160, SCA பிரிவில் -155, ST பிரிவில் -156 மதிப்பெண்கள் சராசரியாக தேவைப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இது தவிர பிரிவுகளை பொறுத்து இந்த கட் ஆப் மதிப்பெண்கள் வேறுபடும்.

விண்ணப்ப முறை:


இத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக கட்டணம் எதுவும் செலுத்தத்தேவையில்லை.

குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் கொடுக்கப்பட்டவுடன் இதில் பதிவு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459